அஷ்டடோ அகடா போட்டியின் நிறைவிழா
தஞ்சாவூர் :தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகம், பிரிஸ்ட் நிகர்நிலை பல்கலைகழகம் ஆகிய இணைந்து நடத்தும் மாபெரும் மூன்றாவது மாநில அளவிலான அஷ்டடோ அகடா போட்டியின் நிறைவு விழா நடைபெற்றது .
இவ்விழாவில் வீரமிக்க முதல் சுதந்திர போராட்ட வீரர்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 7 ம் தலைமுறை வாரிசு தார்ர் மற்றும் குழு தலைவர் த.ராமசாமி தலைமை தாங்கினார். அகமுடையார் அரண் தலைமை ஒருங்கினைப்பாளர் த . சோ பாலமுருகன் ,யு எம் எம் ஏ,எஃப், CEO கிஷோர் ஜெயின் ஆகியோர் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினராக டெல்டா படைத் தளபதி எல்டி ஈசன்,யு எம் எம் ஏ,எஃப் &ஐ சி ஓ, ஆசிய ஜனாதிபதி விக்ரம் காப்பூர் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர,வீராங்கனைகள், ,ஆசான் பெருமக்கள் ஆகியோருக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியினை மாநில துணை தலைவர் என். சுந்தரமூர்த்தி தொகுத்து வழங்கினார். வீர வீரங்கனைகளை திருவள்ளூர் மாவட்ட செயலாளர் . எஸ். ரதிராஜா ஒருங்கினைத்தார் . நிறைவில் மதுரை மாவட்ட செயலாளர் .எஸ். தீபக் நன்றி கூறினார்.
நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தமிழ்நாடு அஷ்டடோ அகடா கழகத்தின் மாநில தலைவர் பி பி.செந்தில்நாதன் ,மாநில பொதுச் செயலாளர் எஸ் புவனேஸ்வரி, ஆகியோரை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டினர்
No comments:
Post a Comment