டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா.
பேராவூரணி ஜூலை 23 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த ஆவணம் பெரியநாயகிபுரத்தில் இயங்கி வரும் டாக்டர் கலாம் பார்மசி கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பார்மசி கவுன்சில் தலைவரும், இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவரும், இந்
திய மருந்தியல் சங்கத்தின் துணைத் தலைவருமான திரு ஜெ.ஜெயசீலன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி மருந்தியல் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி இத்துறையில் சாதனையாளர்களாக உருவெடுப்பதற்கான வழிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக சாய் மிர்ரா இன்னோ ஃபார்ம நிர்வாக இயக்குனர் பாண்டியன், டாக்டர் கலாம் கல்வி நிறுவனத்தின் நிர்வாக பிரதிநிதி அஜித் டேனியல் மற்றும் டாக்டர் கலாம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மதிவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழா கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக விழாவிற்கு கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பரிமளா தேவி வரவேற்பு உரையாற்றினார் விழாவில் பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment