பேராவூரணி ஆதனூர் புனித அன்னாள் தேவாலய ஆண்டு பெருந்திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday, 23 July 2024

பேராவூரணி ஆதனூர் புனித அன்னாள் தேவாலய ஆண்டு பெருந்திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

 


பேராவூரணி ஆதனூர் புனித அன்னாள் தேவாலய ஆண்டு பெருந்திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.



பேராவூரணி ஜூலை 19 தஞ்சை மறைமாவட்டம்,ஆதனூர் பங்கு, புனித அன்னாள் தேவாலய ஆண்டு பெருந்திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.வான வேடிக்கையுடன் மேள தாளங்கள் முழங்க ஆதனூரின் முக்கிய வீதிகளின் வழியாக கொடிபவனியாக வந்து தேவாலயத்தை அடைந்தது. தொடர்ந்து கொடியினை ஆதனூர்பங்குத்தந்தை 


அருட்திரு,கே.எம். ஆரோக்கியசாமிதுரை அடிகளார் புனிதம் செய்து கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து கூட்டு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியை விச்சூர் பங்கு தந்தை இடிமுரசு அருட்திரு , எஸ். ஆரோக்கியசாமி அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார். விழாவில் அருட்கன்னியர்கள், ஆதனூர், பேராவூரணி, ஊமத்தநாடு இறைமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் சபை பொருளாளர் அ.அன்பானந்தம் அனைவருக்கும் நன்றி கூறினார்.


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad