தமிழகத்தில் மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும் சிவசேனா கட்சி அறிக்கை ,
சிவசேனா கட்சி மாநிலத் துணை தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த் தனது அறிக்கையில் கூறியதாவது.
தமிழக அரசு அனைத்து விதமான பயன்பாட்டிற்கான மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது கண்டனத்திற்குரியது , திமுக தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப கட்டணத்தை செலுத்தும் முறையை அமல்படுத்துவோம் என்று கூறி இருந்தார்கள் , ஆனால் ஆட்சிக்கு வந்த அரசு இரண்டாவது முறையாக மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது
இந்த மின்கட்டணம் நடுத்தர மற்றும் சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைக்கப்பட்டுள்ள இந்த மின் கட்டண உயர்வை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் இந்த மின் கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். என்றார்
No comments:
Post a Comment