காமராஜர் பிறந்த நாள் விழா: பேச்சு, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
திருவையாறு ஒளவைக் கோட்டத்தில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சிநாள் மற்றும் ஜீனியர் -ரெட்கிராஸ் பயிலரங்கம் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் பள்ளித்தாளாளர் திருமதி கண்ணகிகலைவேந்தன் தலைமை தாங்கினார் . தமிழய்யா கல்விக் கழக தலைவர் . மு. கலைவேந்தன் முன்னிலை வகித்தார் திருவையாறு தென்னை ஆராய்ச்சியாளர் வேளான் விஞ்ஞானி டாக்டர் வா. செ. செல்வம் சிறப்புரையாற்றினர். முன்னதாக பள்ளித்தலைமை ஆசிரியை கோ கோகிலா வரவேற்றார். திருமதி கா. தீபா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் தொடர்ந்து காமராசர் பற்றி பேசிய மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிறைவில் திருமதி செ.தெரஸா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்தும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்
No comments:
Post a Comment