ஆலங்குளத்தில் ராபர்ட் ப்ரூஸ் எம்.பிக்கு உற்சாக வரவேற்பு.
நெல்லை பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ராபர்ட் ப்ரூஸ் போட்டியிட்டு அமோகமாக வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் முக்கிய தலைவர்களை சந்தித்து விட்டு நேற்று மாலை ஆலங்குளம் வருகை வந்தார். அப்போது காங்கிரஸ் நகர தலைவர் வில்லியம் தாமஸ், திமுக நகர செயலாளர் வக்கீல் நெல்சன் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். தொடர்ந்து முன்னாள் எம்.பி ராமசுப்பு, திமுக நகர திமுக செயலாளர் வக்கீல் நெல்சன், யூனியன் தலைவர் திவ்யா மணிகண்டன், காங்கிரஸ் நகர தலைவர் வில்லியம் தாமஸ் ஆகியோரிடமும், முன்னதாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஆலடி எழில்வாணன், மாநில கலை இலக்கிய அணி துணைத் தலைவர் ஆலடி சங்கரையா, மாறாந்தைகாங்கிரஸ் நிர்வாகி தாயப்பன் ஆகியோரை சந்தித்து தேர்தலில் தனது வெற்றிக்காக உழைத்ததற்கு நன்றி தெரிவித்தார். பின்னர் ஆலங்குளம் தொட்டியான்குளம் மற்றும் அதன் அருகில் நான்கு வழிச்சாலையில் கட்டப்படும் பாலத்தின் வேலையை பார்வையிட்டார்.
அப்போது நகர காங்கிரஸ் கட்சி சார்பில் தொட்டியான் குளத்தை சர்வே செய்து அங்கு ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை சீரமைக்க வேண்டும். தொடர்ந்து கரையைவிரிவுபடுத்தி பொது மக்கள் நடைபயிற்சி செய்ய பயன்படுத்திட உதவிட வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். இது குறித்து ராபர்ட் ப்ரூஸ் எம்.பி கூறுகையில் விரைவில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடமும், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடமும் பேசி நடவடிக்கை எடுப்பதாக கூறி விட்டு சுரண்டை சென்றார். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் துணை த்தலைவர் கண்ணன், வட்டார தலைவர் ரூபன் தேவதாஸ், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் தங்க செல்வம், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அலெக்ஸாண்டர், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி வக்கீல் பிரிவு தலைவர் கருப்பசித்தன், மாநில ஓபிசி பிரிவு துணைத் தலைவர் ஞானபிரகாஷ், இளைஞர் காங்கிரஸ் லெனின், நகர பொதுச்செயலாளர் இயேசு ராஜா, கலை இலக்கிய அணி வட்டாரத் தலைவர் லிவிங்ஸ்டன் விமல், கம்யூனிஸ்ட் கட்சி பாலு கம்யூனிஸ்ட் கட்சி பாலு உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஜே ஐசக் இம்மானுவேல் செய்தியாளர் ஆலங்குளம் தென்காசி மாவட்டம்
No comments:
Post a Comment