கலைத்திறமை பாராட்டி சிறப்பு விருதினை வழங்கியது
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அவ்வை கோட்டத்தில் மெலட்டூர் பாகவத மேளா நாட்டியப்பள்ளி நிறுவனர் ஒளவைகலைக்கூட இயக்குனர் பரதநாட்டிய கலைஞர் பிரியம்வதாமுரளிக்கு கிராம பகுதி மாணவர்களுக்கு பரதநாட்டியக்கலையினை சிறப்பாக கற்றுத்தரும் கலைத்திறமையை பாராட்டி பிரான்சை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் பன்னாட்டு கலாச்சார மையம் கலை, பண்பாட்டினை பாராட்டி பன்னாட்டு அளவில் வழங்கப்படும் சிறப்பு விருதினை வழங்கியது . திருவையாறு ஒளவை கோட்டத்தில் நடந்த விழாவில் ஒளவை கோட்ட நிறுவனர் முனைவர் கலைவேந்தன் பன்னாட்டு சிறப்பு விருதினை பரதநாட்டிய கலைஞர் பிரியம்வதாமுரளிக்கு
வழங்கி பாராட்டினார். இதில் ஒளவை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கோகிலா, உதவி தலைமையாசிரியர் தனலெட்சுமி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment