கலைஞர் பிறந்த நாள் விழா . தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 13 June 2024

கலைஞர் பிறந்த நாள் விழா . தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது.

 


கலைஞர் பிறந்த நாள் விழா . தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி சேலை வழங்கப்பட்டது.



பேராவூரணி தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில், முன்னாள் முதலமைச்சரும்திமுக தலைவருமான மறைந்த கலைஞர் மு.கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பேராவூரணி அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் திமுக தஞ்சை தெற்கு மாவட்ட அமைத்தலைவர் சுப.சேகர், ஒன்றியச் செயலாளர்கள் முத்துமாணிக்கம், அன்பழகன், நகரச் செயலாளர் சேகர், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர ,கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் பேரூராட்சி தூய்மைப் பணியாளர்கள் 100 பேருக்கு வேட்டி, சேலை வழங்கப்பட்டது.


பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad