பேராவூரணியில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 6 May 2024

பேராவூரணியில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு

 


பேராவூரணியில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் நீர் மோர் தண்ணீர் பந்தல் திறப்பு


பேராவூரணி மே.6-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில், தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.


தமிழகத்தில் கோடை வெயில் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தாகம் தீர்க்கும் வகையில் தண்ணீர் பந்தல் ஆங்காங்கே திறக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின்படி, பேராவூரணியில் அதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது. 


நிகழ்ச்சிக்கு, அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சி.வி.சேகர் தலைமையேற்று நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.கழக விவசாய அணி துணைச் செயலாளர் மா. கோவிந்தராசு முன்னாள் எம்எல்ஏ, கழக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் மலை அய்யன்,  கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.ஆர். ஜவகர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ வரவேற்றார். அதிமுக தெற்கு ஒன்றியம் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கட்சியினர்,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 


தொடர்ந்து, பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழங்கள், இளநீர், பனை நொங்கு, குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக பேராவூரணி நீலகண்டன்

No comments:

Post a Comment

Post Top Ad