பேராவூரணி - மே 7 தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மே தினத்தை கொண்டாடும் வகையில் பேராவூரணி ஆவணம் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மே தின கொடி ஏற்றி சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர்.முன்னதாக மாவட்ட நிர்வாக குழு பா.பாலசுந்தரம் கொடியேற்றி சுற்றுப் பயணத்தை தொடங்கி வைத்தார். இந்த சுற்றுப்பயணம் பேராவூரணி கட்சி அலுவலகத்திலிருந்து தொடங்கி சித்தாதிக்காடு. பின்னவாசல். வலப்பிரமன்காடு. சொர்ணக்காடு அம்மையாண்டி உள்ளிட்ட 32 கிராமங்களில் கொடியேற்றி இறுதியாக மாலை 7 மணியளவில் திருச்சிற்றம்பலம் கடைவீதியில் பொதுக் கூட்டம் நடைபெறுவதாக கட்சியினர் கூறினர். இந்த சுற்றுப் பயணத்தில் வீரமணி .தங்கராசு. கருணாமூர்த்தி .ராஜமாணிக்கம். மூர்த்தி .சித்திரவேலு.கருப்பையா. இந்துமதி .கிருஷ்ணமூர்த்தி .ரவி . உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment