மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாரிகள் ஆய்வு.!
பேராவூரணி ஜூன் 01 தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் , கள்ளிவயல்தோட்டம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் விசைப்படகுகளை மீனவா் நலம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் ,மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய மொத்தம் 61 நாள்களுக்கு, பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம்.இந்த தடை காலத்தில் அனைத்து விசைப்படகுகளும் கடலில் இருந்து கரைக்கு ஏற்றப்பட்டு பராமரிப்புப் பணிகள் நடைபெறும். மீன்வளத்துறை உதவி இயக்குநா் தலைமையிலான அதிகாரிகள் குழுவினா் படகுகள் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வுசெய்து சான்றிதழ் வழங்குவா். இந்நிலையில், மல்லிப்பட்டினத்தில் உள்ள 37, கள்ளிவயல்தோட்டத்தில் உள்ள 50 விசைப்படகுகளையும் மீன்வளத்துறையினா் ஆய்வு செய்தனா். ஆய்வின்போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்து அனைத்து படகுகளும் தகுதியானது என சான்றிதழ் வழங்கினர்.
மீனவர் மற்றும் மீன்வளத்துறை ஆய்வாளர்கள் கங்கேஸ்வரி, நடசேராஜன்,பிலிப் ஆகியோர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வில் மீன்வள மேற்பார்வையாளர்கள் விஜயபாலன், விக்னேஷ்வரன், சார்லஸ், மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு உதவி ஆய்வாளர் நவநீதன் மற்றும் ராஜா,தமிழ்நாடு மீனவர் நலவாரிய துணைத்தலைவர் தாஜூதீன்,மீன்பிடி சங்க செயலாளர் இப்ராகீம் மற்றும் நீலகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment