கன்னியாகுறிச்சி ஸ்ரீ வடிவழகி அம்மன் திருக்கோவில் 211 ஆம் ஆண்டு திருவிழா
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கன்னியாக்குறிச்சி ஸ்ரீ வடிவழகி அம்மன் திருக்கோவில் 211 ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
தொடர்ந்து ஆறு நாட்கள் வீதி உலா காட்சி நடைபெற்றது. காவடி எடுத்தல், அர்ச்சனை, மாவிளக்கு, அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருகை புரிந்தனர். விழாவிற்கு சுகாதாரத் துறை காவல்துறை சிறந்த பங்களிப்பை வழங்கினார்கள். விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் A.R.ஜெயபால் மற்றும் அறங்காவலர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
No comments:
Post a Comment