போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Tuesday 12 March 2024

போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தாத திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக சார்பில் தமிழகத்தில் அதிகம் புழகத்தில் இருக்கும்போதைப் பொருட்களை கட்டுப் படுத்தாததிமுக அரசைகண்டித்து மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ஏ.மலைஐயன் தலைமை வகித்தார். நகரக்கழகச் செயலாளர் எம்.எஸ்.நீலகண்டன் அனைவரையும் வரவேற்றார். 

அதிமுக விவசாய பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மா.கோவிந்தராஜ், மாவட்ட அவைத்தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி.திருஞானசம்பந்தம், ஒன்றிய பெருந்தலைவர் சசிகலா ரவிச்சங்கர், தெற்கு ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, வடக்கு ஒன்றிய செயலாளர் உ.துரைமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். போதைப் பொருட்களை கட்டுப்படுத்தாத திமுக அரசு பதவி விளக வேண்டும். கஞ்சா போதைகளிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பபட்டது


பேராவூரணி நீலகண்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad