தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 1 March 2024

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு விழா முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடப்பட்டது.


தமிழக முதல்வர்  மு க ஸ்டாலின் அவர்களால் 19 -09-2023 ஆம் நாளன்று கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் நூற்றாண்டு  முன்னிட்டு  தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மார்பளவு சிலை அமைக்கப்படும் மற்றும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்க 50 இலட்சம் ரூபாய் வைப்பு தொகையாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 


இந்த அறிவிப்பின் படி தமிழ்ஒளி அவர்களின் மார்பளவு சிலை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டது. தமிழக முதல்வர் அவர்களால்  27.02.2024 அன்று தலைமைச் செயலகத்திலுள்ள பத்திரிகையாளர் அறையிலிருந்து கவிஞர் தமிழ்ஒளி அவர்களின் மார்பளவு சிலைக்கான கல்வெட்டினை திறந்து வைத்தார். அதன்பின்னர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் அவர்கள் கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 


இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி ஐசபீர்பானு, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.இரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர், தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad