பேராவூரணி அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 26 February 2024

பேராவூரணி அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன் ஆர்ப்பாட்டம்.


தஞ்சை மாவட்டம், பேராவூரணி, அடுத்த செங்கமங்களம் கிராமத்துக்குள் பஸ் வசதி கேட்டுஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பணிமனை முன்பாக ,செங்கமங்கலம் ஊராட்சிக்குள் இரவு 9 மணிக்கு நகர பேருந்து எண் 2 பொதுமக்கள், பெண்கள் வசதிக்காக ஊராட்சிக்குள் சென்று வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பேராவூரணியில் இருந்து ஆவணம் சாலை செங்கமங்கலம் பேருந்து நிறுத்தம் இருபுறமும் வேகத்தடை அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஐ கிளைச் செயலாளர் எம்.கே.ராமு தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட குழு துரை. பன்னீர்செல்வம், சிபிஐ ஒன்றிய குழு கே.அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் மூர்த்தி, மு.சித்திரவேலு, தங்கராசு ,நீலகண்டன், அரும்புலீஸ்வரன், பெத்தையன், சந்தானம், வீரையன் உள்ளிட்ட கட்சி தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். நிறைவில் விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு வி.ராஜமாணிக்கம் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.


- பேராவூரணி நீலகண்டன்.

No comments:

Post a Comment

Post Top Ad