பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சரஸ்வதி ஹோமம் - மந்திரங்கள் ஓதி.. பூ தூவி பூஜை. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 19 February 2024

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சரஸ்வதி ஹோமம் - மந்திரங்கள் ஓதி.. பூ தூவி பூஜை.


தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி வல்லம் சாலையில் உள்ள சரபோஜி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன்  கோயிலில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுத நடந்த ஸ்ரீ மேதா ஸூக்கு  சரஸ்வதி ஹோம பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இக்கோயிலில் 10ம் வகுப்பு, , பிளஸ் டூ அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் சிறப்பாக தேர்வு எழுதுவதற்கான ஸ்ரீ மேதா ஸூக்கு சரஸ்வதி ஹோம பூஜை கோயில் பரம்பரை அறங்காவலர் தலைவர் எச்.. சித்திரபுத்திரன்  தலைமையில் நடந்தது. 200 க்கு ம் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். சரஸ்வதி ஹோமம் பூஜையில் வைக்கப்பட்ட பேனா, பென்சில், குங்குமத்துடன் மாணவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. சுவாமி அலங்காரத்தினை சாமிநாதன் குருக்கள் செய்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad