பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 55 வது நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் தஞ்சாவூர் மேற்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திமுக சார்பில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ரெத்தினசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான கழக நிர்வாகிகளும் கழகத் தொண்டர்களும் ஊர்வலமாக சென்று அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மலர் மாலைகள் அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் திருவையாறு ஒன்றிய கழகச் செயலாளர் என் இளங்கோவன் மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் முன்னாள் பூதலூர் ஒன்றிய பெருந்தலைவர் காமராஜ் தஞ்சாவூர் ஒன்றிய செயலாளர் நாகத்தி கலியமூர்த்தி திருக்காட்டுப்பள்ளி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜே கே அம்மா பேரவை நகர செயலாளர் கார்த்திகேயன் அடஞ்சூர் கண்ணதாசன் திருவேதுகுடி கோ.சிவசாமி, தலைமை பேச்சாளர் அன்பு முருகன் செங்கிப்பட்டி ராமசாமி பன்னீர் எழிலரசன் மாரியய்யா கேசியர் ராஜாங்கம் மற்றும் திரளான கழகத் தொண்டர்கள் பங்கேற்றனர்
No comments:
Post a Comment