போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி. கல்லூரி மாணவிகள் பங்கேற்பு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 3 February 2024

போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி. கல்லூரி மாணவிகள் பங்கேற்பு.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் வெங்கடேஸ்வரா கலை அறிவியல் மகளிர் கல்லூரி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. இந்தப் பேரணியை கல்லூரி தாளாளர் ஜீவகன் அய்யநாதன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராசேந்திரன் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி அலுவலர்கள் கலை முத்து. அகன்யா. அனிதா ஆகியோர்கள் முன்னிலையில் பேரணி கல்லூரியிலிருந்து தொடங்கி பேராவூரணி பிள்ளையார் கோவில் வழியாக முதன்மை சாலை .சேது சாலை வழியாக சென்று வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வந்தடைந்தது இதில் 150க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துக் கொண்டு கையில் விழிப்புணர்வு வாசகம் கொண்ட பதாகைகளை தாங்கியபடி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

- பேராவூரணி நீலகண்டன்.

No comments:

Post a Comment

Post Top Ad