பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு எழுதும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 28 February 2024

பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு எழுதும் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் பேனா. பென்சில் .நோட்டு புத்தகம் விற்பனை செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின்சார்பில் மாணவ மாணவிகளுக்கு சேவை செய்யும் நோக்கில் பத்து ஆண்டுகளாக பேராவூரணி பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் எழுதும் பொருட்களை இலவசமாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுத இருக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவச எழுது பொருட்கள் வழங்கினார்கள்.  பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இதனை மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன்பெற்றுச் சென்றனர். இதனைப் போலவே பேராவூரணி பகுதியை சுற்றியுள்ள 35 பள்ளிகளில் சுமார் 5.550 மாணவ மாணவிகளுக்கு எழுதுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.


- பேராவூரணி நீலகண்டன்.

No comments:

Post a Comment

Post Top Ad