திருவையாற்றில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Friday 2 February 2024

திருவையாற்றில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


தஞ்சாவூர்  திருவையாற்றில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க பல்லாவரத்தில், உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தவறியும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு காரணமான விடியா திமுக அரசை கண்டித்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா தலைமை வகித்தார் புரட்சி தமிழரின் எழுச்சி தளபதி தஞ்சாவூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ரெத்தினசாமி கண்டன உரையாற்றினார் மாவட்ட அவைத் தலைவர் எம் ராம்குமார் இதய தெய்வம் அம்மா பேரவை மாவட்ட தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் திருவையாறு வடக்கு ஒன்றிய கழக செயலாளர் என் இளங்கோவன் திருவையாறு தெற்கு ஒன்றிய கழக செயலாளர் எஸ் ராஜா தஞ்சாவூர் மேற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் தில்லை சூரிய பிரகாஷ் திருவையாறு முன்னாள் நகரச் செயலாளர் ஆர் செந்தில்குமார் ஏவி சூரிய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளமதி சுப்பிரமணியன் மாவட்ட பொருளாளர் கண்ணபிரான் கழக நிர்வாகிகள் நாகத்தி கலியமூர்த்தி ஓ எ ராமச்சந்திரன் மோகன் சின்னையன் பேரவை மாவட்ட செயலாளர் சண்முக பிரபு பொதுக்குழு உறுப்பினர் செல்வராணி,  கோவிந்தராஜ் கோபிநாத்  சுவாமிவேல் காமராஜ், தலைமை கழக நட்சத்திர பேச்சாளர் நெத்தியடி நாகையன் திருக்காட்டுப்பள்ளி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் ஜே கலியமூர்த்தி மற்றும் திரளான அஇதிமுக தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசுக்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள் இறுதியாக திருவையாறு நகர கழக செயலாளர் எம் செந்தில் மணி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad