பேராவூரணியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 31 January 2024

பேராவூரணியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேராவூரணி அருள்மிகு நீலகண்டப் பிள்ளையார் ஆலயத்தில் தொடங்கிய பேரணிக்கு, கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.திருமலைச்சாமி தலைமை வகித்தார். பேராவூரணி பேரூராட்சித் தலைவர் சாந்தி சேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தார். பேரணி பேருந்து நிலையம், முதன்மைச் சாலை, சேது சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது, இந்நிகழ்வில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

- பேராவூரணி நீலகண்டன் 

No comments:

Post a Comment

Post Top Ad