ஆளுநர் ரவியை எதிர்த்து கும்பகோணத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday 31 January 2024

ஆளுநர் ரவியை எதிர்த்து கும்பகோணத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்.


தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை கண்டித்து கும்பகோணத்தில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி மகாத்மா காந்தியை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். இதனை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி பூங்கா முன்பு விவசாய அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி, தலைமையில் நடைபெற்றது. இதில் விவசாய அணி மாநில பொதுச் செயலாளர் ஓ வி கே வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினர் ஐயப்பன், சுவாமிமலை பேரூர் தலைவர் ராமலிங்கம் ஸ்தபதி, மாநகரத் தலைவர் மருதையன், மாநகரச் செயலாளர் கணபதி, நகர துணை தலைவர் பாலு, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad