தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வட்டார பண்னைத் தகவல் ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம்ளு நடைப்பெற்றது.கூட்டத்திற்கு வேளாண்மை உதவி இயக்குநர் (பொறுப்பு) எஸ்.ராணி தலைமை வகித்து வேளாண் திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார்.
பேராவூரணி ஒன்றியச் செயலாளரும் அட்மா திட்ட தலைவருமாகிய க.அன்பழகன் முன்னிலை வகித்து பேசினார். மற்றும் பொன்.செல்வி தென்னை நாற்றாங்கால் அமைத்தல்.சிறு தானியங்கள் பயிரிடுதல். தொழில் நுட்பம் பற்றி கண்டுணர்வு . சுற்றாவிற்கு அழைத்துச் செல்லுதல் மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி பண்னைப் பள்ளி நடத்துதல். செயல் விளக்கங்கள் குறித்தும் எடுத்துக் கூறினார். உதவி தோட்டக்கலை அலுவலர் எஸ்.ராஜா தோட்டக்கலை திட்டங்கள் பற்றி எடுத்து கூறினார்.
மேலும் இத்திட்டங்கள் குறித்து அனைத்தும் ஆலோசனை குழு உறுப்பினர்கள் முன் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவளர்கள் கு.நெடுஞ்செழியன். த. சத்யா ஆகியோர்கள் செய்திருந்தனர்.
- பேராவூரணி நீலகண்டன் .
No comments:
Post a Comment