பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், பட்டுக்கோட்டை எம்எல்ஏ அண்ணாதுரை ஆகியோர் முன்னிலையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கொடியசைத்து மாட்டுவண்டிப் பந்தயத்தை தொடங்கி வைத்தார். பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை, புதுப்பூட்டு குதிரை என 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. இவற்றிற்கு மொத்த பரிசாக சுமார், ரூபாய் 5 லட்சம் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற மாடு, குதிரை வண்டி உரிமையாளர்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பரிசு, சுழற்கேடயம் பரிசு வழங்கப்பட்டது.
போட்டி தொடங்கியதும் எல்கையை நோக்கி குதிரை வண்டிகள் - மாட்டு வண்டிகள் சீறிப்பாய்ந்தன. 4 பிரிவுகளிலும் 67 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும், 2 பிரிவுகளில் 20 க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகளும் பங்கு பெற்றன. மாட்டு வண்டி, குதிரை வண்டி பந்தயங்களை, சுமார் 8 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் இருந்து பொதுமக்கள், பந்தயக் கலா ரசிகர்கள் கண்டு ரசித்தனர். இதையொட்டி காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- பேராவூரணி நீலகண்டன்.
No comments:
Post a Comment