திருவையாறு அருகே கல்யாணபுரம் ஒத்ததெரு வாஜ்பாய் நினைவரங்கத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமர் கோவில் தொடர்பான முதல்நாள் கலைநிகழ்ச்சிகள் துவக்கவிழா நடந்தது.
டில்லி தமிழ் சங்க பொதுச்செயலாளர் இரா.முகுந்தன் குத்து விளக்கு ஏற்றிவைத்து ஸ்ரீ ராமருக்கு பூஜைகள் செய்து விழாவை துவக்கிவைத்து, மாணவ, மாணவிகளின் கம்பராமாயணம் ஒப்புவித்தல், ஆடல்வல்லான் நாட்டியாலயா பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பேனா, நோட்டு பரிசாக வழங்கினார்.
இதில் மாணவ, மாணவிகள், ஆன்மீக பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாஜக மூத்த உறுப்பினர் ராதிகாகேசவன் செய்திருந்தார். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 22-ந்தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறும் என்று பாஜக மூத்த உறுப்பினர் ராதிகாகேசவன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment