ஒட்டங்காடு ஊராட்சியில் ரூ.64.83 லட்சத்தில் சாலைப்பணிகள் : பேராவூரணி எம்எல்ஏ துவக்கி வைத்தார். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 18 January 2024

ஒட்டங்காடு ஊராட்சியில் ரூ.64.83 லட்சத்தில் சாலைப்பணிகள் : பேராவூரணி எம்எல்ஏ துவக்கி வைத்தார்.


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், ஓட்டங்காடு ஊராட்சி, கட்டையங்காடு - மதன்பட்டவூர் சாலை ரூபாய் 31.36 லட்சம் மதிப்பீட்டில், ஒட்டங்காடு - கோரவயல்காடு சாலை ரூ.33.46 லட்சம் மதிப்பீட்டிலும், முதலமைச்சர் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது. 

இதற்கான பணிகளை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி பொய்யாமொழி, பேராவூரணி திமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் க.அன்பழகன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், பேராவூரணி நகரச் செயலர் என்.எஸ்.சேகர், ஊராட்சி மன்றத்தலைவர் ராசாக்கண்ணு, ஒன்றியக் குழு உறுப்பினர் பாக்கியம், அ.அப்துல் ஜபார், முத்துவேல், ரகுநாதன், முத்துகிருஷ்ணன், கந்தசாமி, விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


-  பேராவூரணி செய்தியாளர் த.நீலகண்டன்.

No comments:

Post a Comment

Post Top Ad