காவேரி நதி தீர்த்தத்தில் பிருந்தாவனஸ்தராகி, தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் ஸ்ரீவிஜயீந்திர சுவாமிகள், மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின் பரமகுரு ஆவார். இத்தகைய சிறப்பினை பெற்ற கும்பகோணம் சோலையப்பன் தெருவில் உள்ள ஸ்ரீவிஜயீந்திர சுவாமிகள் மடத்தில் நேற்று முன்தினம் மாட்டு பொங்கலன்று பஞ்சமியை முன்னிட்டு உலக நன்மை வேண்டி பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு மந்திராலயம் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீஸ்ரீசுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காமதேனு கோசாலை பணியை தொடங்கி வைத்தார்.
தற்போது கோசாலையின் முழு பணிகள் நிறைவடைந்து கிரஹப்பிரவேசம் செய்யப்பட்டு கோபூஜை நடைபெற்றது. அப்போது மடத்தின் அர்ச்சகர்களும், நிர்வாகிகளும் பிருந்தாவனத்தை வலம் வந்து காளை, பசு மற்றும் கன்றுகளுக்கு நெட்டி மாலை, மலர் மாலை அணிவித்து, மஞ்சள், குங்குமத்தால் திலகமிட்டு, சர்க்கரை பொங்கல், பழங்கள் உணவாக அளித்து, புஷ்பார்ச்சனையுடன் கற்பூர ஆர்த்தி செய்து கோபூஜை சிறப்பு வழிபாடு செய்தனர்.
No comments:
Post a Comment