தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 22 January 2024

தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது.


தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் ,ஆசிரியர் குரல் வார இதழ் ஆகிய சார்பில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை(28-01-2024) புதுக்கோட்டை சாலையில் உள்ள  பிஷப் சுந்தரம்  பிஷப்  தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா,பிஷப் சுந்தரம் வளாகத்தில் காலை 8.30  முதல் மாலை 4 மணி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது ஆசிரியருக்கான சிறப்பு முகாம் என்பதனால், ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள்,முதுநிலை பட்டதாரிகள்,உடற்கல்வி ஆசிரியர்கள்,என ஆண் பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்றுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இந்த முகாமில் பங்கேற்க வயது வரம்பில்லை, இந்த வேலை வாய்ப்பு முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றார்கள்.


எனவே, ஆசிரியர்கள் அதிகளவில் பங்கேற்று இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற பயன்பெறலாம். இத்தகவலை தனியார்  ஆசிரியர் மன்றம் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad