தஞ்சாவூர் கலைஞரின் கலைப் பயணமும் அவரது திட்டங்களை நினைவு கூறும் வகையில் 6 ஆம் வகுப்பு முதல் இளங்கலை வகுப்பு வரையிலான பயிலும் மாணவ -மாணவிகளுக்கான ஓவிய போட்டி பாரத் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. .
போட்டிக்கு மாநகர மேயர் சண். ,ராமநாதன்,துணை மேயர் டாக்டர் அஞ்சகம் பூபதி ஆகியோர் வாழ்த்துக்களுடன், தமிழ்ப் பல்கலைக் கழகம், நாட்டுப்புறவியல் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் சீமான் இளையராஜா தலைமையில், நவின் ஓவியர் வி இராஜகோபால், கலை ஆவண புகைப்படக் கலைஞர் ஓவியர் ஆர். மணிவண்ணன், மதுரை சுபலட்சுமி இலக்குமிபதி அறிவியல் கல்லூரி, உதவி பேராசிரியர் ஓவியர் ஆர் அருள் யோகராஜ், சென்னை சவிதா பல்கலைக்கழகம், உதவி பேராசிரியர், சிற்பி, ஓவியர் பி. தனசீலன், சினிமா உதவி இயக்குனர், கலை இளமணி, ஓவியர் ஏ.நவீன் ஆகியோர் நடுவராக கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் 6 ஆம் வகுப்பு முதல் இளங்கலை வகுப்பு வரை பயிலும் பல்வேறு பள்ளி,கல்லூரி சேர்ந்த மாணவ -மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கலைஞர் ஓவியங்கள்,திட்டங்கள் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் ஓவியங்கள் வரைந்து தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பங்கு பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் சிறப்பாக ஓவியம் வரைந்த மாணவ மாணவிகள் 100 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு புத்தக வடிவில் ஓவியம் வரைவதற்கான மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படும்.
நிகழ்வை மேற்பார்வையாளர் தஞ்சை கலைவளர்மணிஓவிய க. ஈஸ்வரன், ஒருங்கிணைப்பாளர் எக்ஸ்டீம் எஜுகேஷன் நிறுவனர் பிரேமலதா லட்சுமணன், மக்கள் தொடர்பு அலுவலரும், எழுத்தாளருமான பாலமுருகன் ஆகியோர் போட்டியை நடத்தி மேற்கொண்டு வரும் பிப்ரவரி 24 - ம் தேதி கலைஞரின் கலைப்பயணமும் அவரது திட்டங்களும் பற்றியும் ஓவியமாக கலைஞரின் கலைஞர் என்ற புத்தகம் வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment