தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேராவூரணியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி (மேற்கு) அமைந்துள்ளது இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 65க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வந்தனர் இந்நிலையில் அந்த கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதை அகற்றிவிட்டு தற்காலிகமாக தகர கொட்டகை அமைத்து அதில் வகுப்புகள் நடந்து வந்துள்ளது.
இந்நிலையில் மழை காலம் என்பதால் எங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் கடந்த மாதம் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம் நடத்தினர் அதன் பிறகு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 31 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு இன்று அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். உடன் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள். வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராமத்தினர் கலந்துக் கொண்டனர்.
- செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி
No comments:
Post a Comment