தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி கடைவீதிக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்துச் செல்கின்றனர். இதனால் காலை மாலை நேரங்களில் கடைவீதி பரபரப்பாகவே காணப்படும் இதனுடன் பள்ளிக் கல்லூரி மாணவ மாணவிகளும் சென்று வருகின்றனர் இந்நிலையில் பேராவூரணி முக்கிய சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வருகின்றன இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றார்.
இது மட்டுமின்றி விபத்துக்களும் நடக்கின்றன. பள்ளிக் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பேராவூரணி பேரூராட்சியினர் இதை கவணத்தில் கொண்டு நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.
செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி.
No comments:
Post a Comment