அப்படிப்பட்ட காஷ்மீரத்தின் பெருமையைப் புரிந்து கொண்டு அதைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றார். கோயில் கட்டடக்கலை ஆராய்ச்சியாளர் ஸ்ரீ வத்ஸம் சீதாராமன் காஷ்மீரில் இருந்து வந்த திருமூலர் எனும் தலைப்பில் பேசினார். தொல்லியல் ஆய்வாளர் டி.கே. வி. ராஜன் பேசுகையில், காஷ்மீரத்துக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கி.பி. 6ம் நூற்றாண்டிலேயே, காஞ்சிபுரத்திலிருந்து பல மாணவர்கள் இந்து மற்றும் பவுத்த மதங்களைப் படிப்பதற்காக காஷ்மீருக்கு சென்றுள்ளார்கள். இதற்கு இலக்கிய ஆதாரங்கள் உள்ளன.
இளைய தலைமுறைக்கு காஷ்மீர், இலங்கையின் பெருமை, அதன் பங்களிப்பு தெரிய வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத்திட்டங்களில் காஷ்மீர், இலங்கை வரலாற்று பெருமைகள் பற்றி இல்லாமல் உள்ளது. காஷ்மீர் நமது நாட்டின் பண்பாடு கலாச்சாரத்தை எவ்வாறு உயர்த்தியது என்பதை இந்த வரலாற்று கண்காட்சி உணர்த்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளில் கண்காட்சி நடத்திட விரும்பினால் அதற்கு வழிவகை செய்து தருகிறோம் என்றார்.
காஷ்மீர் இந்தியாவின் மகுடம் எனும் நூலை வெளியிட அதனை புவியியல் ஆய்வாளர் செல்வ முத்துக்குமார் பெற்றுக்கொண்டார். வரலாற்றுக் கண்காட்சியை பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கண்டு குறிப்பெடுத்து பயனடைந்தனர். தொடர்ந்து மூன்று நாட்கள் கண்காட்சி நடக்கிறது. கலைமாமணி ஜானகி அம்மாள் இறை வணக்கம் மற்றும் குரு வணக்கம் பாடினார். ரங்கராஜன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment