தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த வலப் பிரமன்காடு கிராமத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள விவசாயி சோமசுந்தரம் அவர்களின் மனைவியும் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளார் சோம.நீலகண்டன் அவர்களின் தாயார் சோம.மீனாகுமாரி(70) உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை இயற்கை எய்தினார்.
இந்நிலையில் இவரது குடும்பத்தினரின் ஒப்புதலோடு இரந்த மீனாகுமாரியின்இரண்டு கண்களும் லயன்ஸ் சங்கத்தினரிடம் தானமாக வழங்கப்பட்டது .இதனைத் தொடர்ந்து மதியம் 12 மணியளவில் இவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கினார்கள். இந்நிகழ்வு இப்பகுதியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி
No comments:
Post a Comment