தஞ்சாவூரில், திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவசாயிகள் பிரச்னைக்காக, முதலமைச்சரின் கவன ஈர்ப்பு காத்திருப்பு போராட்டம் நடத்த சென்ற, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மீது, காவல்துறையினர் அராஜகமான முறையில் தாக்கி கைது செய்ததைக் கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இதில் மூத்த தோழர் வீ.கருப்பையா, சேதுபாவாசத்திரம் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர் சிதம்பரம், விவசாயிகள் சங்கம் ஜாக்குலின் மேரி, நகரக்குழு உறுப்பினர் கந்தசாமி, நீலமோகன், ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- செய்தியாளர் த.நீலகண்டன் பேராவூரணி
No comments:
Post a Comment