அப்போது ரயில் நிலையம் அருகே சென்றபோது, எதிரே வந்த நபர் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்தார். மேலும் கண்ணாடியை உடைத்த நபரை பிடித்து வைத்துக் கொண்டு, இது குறித்து பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர், போக்குவரத்து கழக கிளை மேலாளருக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர்.
பேராவூரணி காவல்துறையினர் அந்த நபரை அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் மணமேல்குடியைச் சேர்ந்தவரும் தற்போது பேராவூரணி ஆவணம் சாலையில் வசித்து வருபவருமான நீலகண்டன் என்பவரது மகன் முத்துச்செல்வன் (22) என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கண்ணாடியை உடைத்தவரின் பெற்றோர்கள் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு வந்து முத்துச்செல்வன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதையும், பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதற்கான இழப்பு தொகையையும் செலுத்தி விடுவதாக உறுதி அளித்தனர். இதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதியாமல் அனுப்பி வைத்தனர்.
- செய்தியாளர் பேராவூரணி நீலகண்டன்
No comments:
Post a Comment