கும்பகோணம் துக்கம்பாளையம் தெரு அருகில் அருணகிரிப் பேட்டையில் உள்ளஸ்ரீ விநோத பாலநாகம்மா, ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது, இதையொட்டி, கோயில் வளாகத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் உள்ளிட்ட ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் அஷ்டபந்தனம் சாற்றுதல், நாடிசந்தானம், யாத்ராதானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்டவை நடைபெற்றன.
இதனைத் தொடா்ந்து, புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனித நீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தா்கள் மீது புனித நீா் தெளிக்கப்பட்டது. அன்னதானமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment