இந்நிகழ்ச்சிக்கு சிவசேனா கட்சி தஞ்சை ஒருங்கிணைந்த மண்டல தலைவர் எஸ். பூக்கடை ஆனந்த் தலைமை தாங்கினார், பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் தஞ்சை மாவட்ட தலைவர் சபரி தேவர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்கள் சிவசேனா கட்சி மாநில செயல் தலைவர் பாவை. சசிகுமார், இந்து மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி, பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பசும்பொன் பாண்டியன், மாவட்ட செயலாளர் த.வேதா, மாவட்ட துணை தலைவர் பிரேம்நாத், மண்டல தலைவர் பி.எல்.அண்ணாமலை, அ.தி.மு.க பெருநகரச் செயலாளர் முன்னால் சட்டமன்ற உறுப்பினர் இரா.இராமநாதன், கும்பகோணம் ஒன்றிய செயலாளர் சோழபுரம் அறிவழகன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட தேர்தல் பிரிவு தலைவர் தபரத், சமூக ஆர்வலர் கணபதி தேவர், கபிஸ்தலம் செல்வம், அகில பாரத இந்து மகா சபா.மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் சிவசேனா, அகில பாரத இந்து மகா சபா, இந்துமக்கள் கட்சி, பலவேறு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment