தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக, தெற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் சிறப்பு முகாம் நடைப்பெற்றது. முகாமிற்கு ஒன்றிய அவைத் தலைவர் சீனிவாசன், .பேருர் கழக அவைத் தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர்தலைமை வகித்தனர்.
முன்னால் மாவட்ட செயலாளர் பட்டுக்கோட்டை கார்த்திகேயன் சிறப்புறையாற்றினார்.மாவட்ட அவைத் தலைவர் எஸ்.வி. திருஞானசம்மந்தம். ஒன்றிய செயலாளார் கோவி.இளங்கோ, நகர கழக செயலளார் எம்.எஸ். நீலகண்டன், முன்னால் மாநில கயர் வாரியத் தலைவர் நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துக் கொண்டனர். நிறைவாக ஒன்றியபொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.
- செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment