முகாமிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகர செயலாளர் செந்தில்வேலன், பேரூர் அவைத்தலைவர் மணி, பேரூர் துணை செயலாளர் ரேவதி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வநாயகி ராஜா வரவேற்றார். சங்கத்தின் நலவாரிய உறுப்பினர் முகாம் மற்றும் நல வாரிய உறுப்பினர் அடையாள அட்டையை பயனாளிகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம். ரெங்கசாமி வழங்கி சிறப்புரையாற்றினார்.
முகாமில் கும்பகோணம் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் செல்லத்தம்பி, தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், பாபுராஜபுரம் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ரவிச்சந்திரன், பாபநாசம் தொகுதி பொறுப்பாளர் சுகுமார், மருத்துவர் அசரப் அலி, ஒன்றிய பொறுப்பாளர்கள் முகமது ஜாவித், பிரசன்னா, தாரணி, மில்டன் மற்றும் ஏராளமான பொதுமக்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர். அமமுக சுவாமிமலை பேரூர் மாணவரணி செயலாளர் கதிரவன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment