தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேரூராட்சியை சேர்ந்த ஆத்தாளூர் கிராமத்தில் எழுந்துள்ள அருள்மிகு வீரமாகாளியம்மன் கோவில் கடந்த ஜூன் 27ம் தேதி கொடியேற்றத்துடன் காப்பு கட்டப்பட்டு தொடர்ந்து திருவிழா நடைப்பெற்று வருகிறது.
ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று முடப்புளிக்காடு, தென்னங்குடி, களத்தூர், கழனிவாசல் ஆகிய கிராமங்களிலிருந்து பக்தர்கள் மது எடுத்து வந்தனர். அதன் பிறகு அருள்மிகு வீரமாகாளியம்மன் தேரோட்டம் வெகு விமர்சையாய் நடைப்பெற்றது.
சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து வந்தனர் திரளான மக்கள் வெள்ளத்தில் அருள்மிகு வீரமாகாளியம்மன் வலம் வந்து அருள் பாலித்தது.பக்தர்கள் கூட்டம் அம்மன் அருள் பெற்று சென்றனர்.
- செய்தியாளர் த.நீலகண்டன்
No comments:
Post a Comment