சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் மனு - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 5 June 2023

சாலைகளை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் மனு


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றியம் பாச்சூர் ஊராட்சி அய்யம்பட்டி முதல் கீராத்தூர்  வரை செல்கின்ற மயானம், விளைநிலங்கள் சாலையில் பழுதான தார் சாலையை புதுப்பிக்க கோரி  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அவர்களிடம், ஆழ்துளை கிணற்றுப் பாசன விவசாயிகள் நலச்சங்கம் தலைவர் ஆர் புண்ணியமூர்த்தி  கோரிக்கை மனுவினை அளித்தார்.


அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது ஒரத்தநாடு ஒன்றியம்  பாச்சூர் ஊராட்சி  ஒன்றியத்திற்குட்பட்ட அய்யம்பட்டி  கிராமத்தில் இருந்து கீராத்தூர் .செல்கின்ற  மயான சாலையில் சுமார் 350 மீட்டர் ஒன்றிய கவுன்சிலர் நிதியிலிருந்து சாலை புதுப்பித்து தார் சாலை அமைக்கப்பட்டது.


மீதமுள்ள  சுமார் 400 மீட்டர் சாலையை புதுப்பிக்க கோரி ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடர்பு கொண்டதில் நிதி இல்லை என்று தெரிவிக்கின்றனர்.எனவே மீதி உள்ள பழுதான தார் சாலையை புதுப்பிக்கக்கோரி  மாவட்ட ஆட்சியர் அவர்களிடம்  நிதி ஒதுக்கி தருமாறு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பாக  கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Post Top Ad