25 ஆண்டுகள் இறைபணியாற்றிய அருட்தந்தைக்கு குருத்துவ வெள்ளி விழா அனுசரிப்பு. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 1 May 2023

25 ஆண்டுகள் இறைபணியாற்றிய அருட்தந்தைக்கு குருத்துவ வெள்ளி விழா அனுசரிப்பு.


25 ஆண்டுகள் இறைபணியாற்றிய அருட்தந்தைக்கு குருத்துவ வெள்ளி விழா அனுசரிப்பு. 



தஞ்சையில் 25 ஆண்டுகள் இறைபணியாற்றிய அருட் தந்தைக்கு வெள்ளி விழா வெகு விமரிசையாக அனுசரிக்கப்பட்டது.


தஞ்சாவூர் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா சிபிஎஸ்ஐ பள்ளியின் தாளாளர் அருட்தந்தை எஸ். வின்சென்ட் அருட்பணியாளராக திருநிலைப் படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி அவரது குருத்துவ வெள்ளி விழா பள்ளி வளாகத்தில் திங்கட்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.


குருத்துவ வெள்ளி விழா, நன்றி திருப்பலி மங்கள ஆராத்தியுடன் தொடங்கியது. . விழாவிற்குதஞ்சை முன்னாள் ஆயர் டாக்டர் எம். தேவதாஸ் அம்புரோஸ் ,கும்பகோணம் ஆயர் டாக்டர் எஃப். அந்தோணிசாமி ,தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் டாக்டர் எல்.சகாயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வாழ்த்தினர்.150க்கும் மேற்பட்டஅருட்தந்தையர்கள், 100க்கும் மேற்பட்ட அருட்கன்னியர்கள் பங்கேற்றனர்.



முன்னதாக பள்ளி வளாகத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க அருட்தந்தையை ஊர்வலமாக மலர் தூவி அழைத்து வந்தனர். பின்னர் சிறப்பு ஆலய வழிபாடு அவருக்காக நடத்தப்பட்டது. முன்னதாக நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது


திருப்பலிக்குப்பின் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.இராமநாதன்,துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, இறை மக்கள் ,பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று அவருக்கு பூங்கொத்துக்களை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad