பேராவூரணி அருகே கூரை வீடு தீ பற்றி எரிந்து நாசம் எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆறுதல்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்தசேதுபாவா சத்திரம் ஒன்றியம்.சொக்கநாதபுரம் ஊராட்சியில் சொக்கநாதபுரம் ஒத்தக்கடையில் இன்று அதிகாலை 4 மணியலவில்நடேசன் என்பவருக்கு சொந்தமான கூரை வீடு திடீரென தீ பற்றி எரிந்து முற்றிலும் சாம்பலாகிவிட்டது தகவலறிந்த சட்ட மன்ற உறுப்பினர் நா-அசோக்குமார் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தார்களுக்கு காய்கறி, மளிகை சாமான், அரிசி ஆகிய பொருட்களுடன் ரூபாய் 5,000ம் நிவாரணம் வழங்கினார்.
உடன் ஒன்றிய பெருந்தலைவர் மு. கி.முத்துமாணிக்கம், ஊ.ம.தலைவர் ராம்பிரசாத், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் மஜீது, தனபால், ஒன்றிய குழு உறுப்பினர் ராசேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உடன் இருந்தனர்
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment