தஞ்சையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
தஞ்சாவூர் மாநகர மூவேந்தர் முன்னேற்ற கழகம் மற்றும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்க தொழிற் சங்கம் இணைந்து நடத்தும் பழைய வீட்டு வசதி வாரியம் குடியோர் பகுதி ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் தண்ணீர் பந்தல் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது .
இதன் திறப்பு விழாவில் மூவேந்தர் முன்னேற்ற கழகம் கிழக்கு மண்டல செயலாளர் ஜெய்வீர் ஆர்சுத்தியார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர், தண்ணீர்,தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் இதில்,நிர்வாகிகள்,சங்க தொழிற்சங்கத்தினர் ,பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். விரைவில் மூவேந்திர முன்னேற்றக் கழகத் தலைவர் ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் முன்னிலையில் சங்கத்துடன் இணைப்பு விழா நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment