தஞ்சையில் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக நாள் விழா.
தஞ்சாவூர் வட்டாரக் பண்ணை இலக்கியங்கள் மாவட்ட மைய நூலகத்தில் உலக புத்தக நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி புத்தக கண்காட்சியை துவக்கி வைத்தார். வாசகா் வட்டத் தலைவா் புல்வர் .மா.கோபாலகிருட்டினன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் (நகரம்) திருமதி சி அம்பிகா,(ஊரகம்)திருமதி எஸ். சங்கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளா்களாக திருவையாறு ஒளவைக் கோட்டம் நிறுவனர் முனைவர் மு.கலைவேந்தன்,தஞ்சை பாரதி புத்தகப் பெண்ணை எல் .என் பாரத் ரவீந்திரன் ஆகியோா் பங்கேற்று, படித்ததும் பிடித்ததும் மனித வாழ்வில் நூல்களின் பங்களிப்பு மற்றும் நூலகத்தின் சிறப்புகள், உலக தமிழ் இலக்கியங்கள் குறித்து கருத்துரையாற்றினா்.
தொடர்ந்து கவிஞர் க. பஞ்சாட்சரம், ராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் டி எம் முபாரக் உசேன், வீ.புண்ணியமூர்த்தி, நூலகர் (இரண்டாம் நிலை) அனிதா, ஆகியோர் வாழ்த்துரை ஆற்றினார்கள். மூத்த வாசகா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக வாசகர் வட்டத் துணைத்தலைவர் எஸ். ராஜவேல் வரவேற்றார்.இறுதியில் முதுநிலை ஆசிரியர்(பநி)கோ.இராசேந்திரன் நன்றி கூறினார்
No comments:
Post a Comment