ஆதனூர் புனித வனத்துசின்னப்பர் ஆலய ஆண்டு பெருந்திருவிழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 22 April 2023

ஆதனூர் புனித வனத்துசின்னப்பர் ஆலய ஆண்டு பெருந்திருவிழா.


ஆதனூர் புனித வனத்துசின்னப்பர் ஆலய ஆண்டு பெருந்திருவிழா. 



தஞ்சை மாவட்டம், பேராவூரணி பேரூராட்சி ஆதனூர் கிராமத்தில் விவசாயிகளின் காவல் தெய்வமாக விளங்கும் புனிதர் வனத்து சின்னப்பர் ஆலய ஆண்டு பெருந்திருவிழா நடைபெற்றது. திருவிழா திருப்பலியை ஆதனூர் பங்குத்தந்தை அருட்திரு ,ஆரோக்கியசாமிதுரை அடிகளார் நிறைவேற்றினார். திருப்பலியில் அருட்கன்னியர்கள், பாடல் குழுவினர், ஆதனூர், பேராவூரணி, ஊமத்தநாடு இறைமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


விழா ஏற்பாடுகளை ஆர்சி சபை நிர்வாகிகள் செய்திருந்தனர். விழாவில் செயலாளர் எஸ்.மரியசவரிநாதன்,  பொருளாளர் இ.பாலன், கிராமத் தலைவரும், முன்னாள் காவல்துறை உதவி ஆய்வாளருமான அ.இருதயராஜ், சபை நிர்வாகிகள், அ.அன்பானந்தம், எம்.செல்வஸ்டார், முன்னாள்நேஷனல் கபடி வீரர் அ.சின்னப்பா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 


திருப்பலியை தொடர்ந்து,விவசாயிகள் அவர்களின் காவல் தெய்வமாக வணங்கி வருகின்றனர்.இதில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுபுனிதர் வனத்து சின்னப்பரின் ஆசி பெற்று சென்றனர்.


செய்தி: த.நீலகண்டன் .

No comments:

Post a Comment

Post Top Ad