மாற்றி யோசி. மாணவர்களுக்கு இலவச விழிப்புனர்வு நிகழ்ச்சி .
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் துளிர் அறக்கட்டளை நண்பர்களால் நடத்தப்பட்ட+ 2 வுக்கு பிறகு என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம் ஆலோசனை விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் தலைமையில் நடைபெற்றது.சென்னை, திருச்சி, தஞ்சாவூர் கல்லூரி பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கினர்.
முன்னதாக பேரை துளிர் அறக்கட்டளை தலைவர் நாகேந்திரகுமார் வரவேற்றார். நிறைவாக செயலாளர் சண்முகநாதன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தி: த.நீலகண்டன்
No comments:
Post a Comment