தமிழர்களின் பொங்கல் பண்டிகையின் போது போனஸ் வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல். - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Sunday, 5 February 2023

தமிழர்களின் பொங்கல் பண்டிகையின் போது போனஸ் வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல்.

தமிழர்களின் பொங்கல் பண்டிகையின் போது போனஸ் வழங்க வேண்டும்: பழ.நெடுமாறன் வலியுறுத்தல். 


பொங்கல் பண்டிகையின் போது, ​​அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தமிழக அரசு போனஸ் வழங்க வேண்டும்' என, உலகத் தமிழர் கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.


தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவை நிறைவு செய்து அவர் மேலும் பேசியது:



தேசிய அடையாளம் தாய்மொழி.  தமிழ் மொழி நம் தமிழ் இனத்தின் அடையாளம்.  அதனடிப்படையில் தமிழ் வழி தேசியம் மேலோங்க வேண்டும்.  மதம் ஒருபோதும் மக்களை ஒன்றிணைப்பதில்லை.  மதம் யாருக்கும் பயனில்லை.

 


அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படுகிறது.  இனிமேல் தமிழர் திருநாளான பொங்கலின் போது போனஸ் வழங்க வேண்டும்.  இதை தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளாக வலியுறுத்துகிறேன்.



வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவம் தமிழகத்தில் மீண்டும் நடக்கக் கூடாது.  சாதியின் அடிப்படையில் மக்களை இழிவுபடுத்துவது நாகரீகமற்ற செயல்.  அது கண்டிக்கத்தக்கது.  ஜாதி, மத வேறுபாடுகளுக்கு எதிராக பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றார் நெடுமாறன். காலையில் சிறுவர், சிறுமியருக்கு ஆடை அலங்காரப் போட்டியும், மதியம் ஓவியப் போட்டியும், இசை நிகழ்ச்சியும் நடந்தது.


இதைத் தொடர்ந்து மாலை நடைபெற்ற நிறைவு விழாவுக்கு உலகத் தமிழ்ப் பேரவை அமைப்பின் துணைத் தலைவர் டாக்டர் மணிவண்ணன் தலைமை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பான் செக்ஸ் மகளிர் கல்லூரி முதல்வர் செ..காயத்ரி பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் கவிஞா் நா.முத்துநிலவன் சிறப்புரையாற்றினாா்.


உலகத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் ஜோ.  ஜான் கென்னடி, மாநில செயலாளர்.  துரை. குபேந்திரன், துணைத் தலைவர் அய்யனாபுரம் சி.முருகேசன், டாக்டர் இளரா.  பாரதிசெல்வன், முள்ளிவாய்க்கால் முற்றம் நிர்வாகிகள் சு.  பழனிராஜன், பொன்.  வைத்தியநாதன், சதா.  முத்துக்கிருஷ்ணன், இராம.  சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


  நிகழ்ச்சிகளை முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத் தலைவா் பேராசிரியா் வி. பாரி தொகுத்து வழங்கினாா். நிறைவாக, புலவா் கரு. அரங்கராசன் நன்றி கூறினாா்.

No comments:

Post a Comment

Post Top Ad