தமிழக தொழிலாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து தமிழர் தேசிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 1 February 2023

தமிழக தொழிலாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து தமிழர் தேசிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழக தொழிலாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து  தமிழர் தேசிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தஞ்சாவூர் மாவட்டம் திருப்பூர் மற்றும் சூளகிரியில் தமிழர்கள் மீது இந்தியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்து தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் புதன்கிழமை மாலை தமிழர் தேசிய இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர், சூளகிரியில் தமிழக தொழிலாளர்கள் மீதான கொலைவெறித் தாக்குதலைக் கண்டித்தும், வெளியாட்களை வெளியேற்றக் கோரியும், தமிழகத்தை விட்டு வெளியேறிய தொழில்முனைவோருக்கு தமிழக அரசு உடனடியாக தமிழ் வேலைவாய்ப்பு வாரியம் அமைக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.


இந்தப் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலர் நா.வைகரை தலைமை வகித்தார். பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையுரையாற்றினார். நிர்வாகிகள் பழ.ராசேந்திரன், தென்னவன், ராமு, ராசு.முனியாண்டி, வெள்ளம்பேரம்பூர் துரை.ரமேஷ், புண்ணியூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad