மாவட்ட மூத்த குடிமக்கள் சங்கம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் சார்பில் அரிசி வெல்லம், கரும்பு வழங்கும் விழா. - தமிழக குரல்™ - தஞ்சாவூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Wednesday, 11 January 2023

மாவட்ட மூத்த குடிமக்கள் சங்கம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் சார்பில் அரிசி வெல்லம், கரும்பு வழங்கும் விழா.


தஞ்சாவூரில், தஞ்சை மாவட்ட மூத்த குடிமக்கள் சங்கம் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம் இணைந்து செந்தமிழ் நகரில் வசிக்கும் 70 பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்களுக்கு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி வெல்லம், கரும்பு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு  சங்க மாவட்டத் தலைவர் தென்னை விஞ்ஞானி டாக்டர் வா.செ.செல்வம்  தலைமை வகித்தார். மக்கள் உரிமைகள் பாதுகாப்பு சங்க மாநிலத் தலைவர் டாக்டர் எஸ். பாலசுப்பிரமணியன் அவர்கள் முன்னிலை வகித்தார்.  தொடர்ந்து  சங்கச் செயலர், அய்யாறு ச.புகழேந்தி, பொருளர் கண்டிமுத்து, துணைச் செயலர் துரை.கோவிந்தராஜ்  உள்ளிட்டோர் உடன்  இருந்தனர். மக்கள் உரிமை பாதுகாப்பு கழக மாநிலத் துணைத்தலைவர் டாக்டர் . க கே.ரஞ்சித்குமார், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் எம்.சண்முகம், மண்டலப்பொறுப்பாளர் ஏ.ஆர் சுப்பிரமணியன் ,  சந்திரசேகரன், ராஜா, திருசக்திவேல்  கிருஷ்ணமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவினை சங்க ஒருங்கிணைப்பாளரும், மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக மாநில கொள்கைப் பரப்புச் செயலாளருமான புலவர் ஆதி.நெடுஞ்செழியன் அவர்கள் அனைத்து   ஏற்பாடுகளையும் செய்திருந்தார். 

No comments:

Post a Comment

Post Top Ad